-->

6ஆம் வகுப்பு இயல் -1

                 ஆறாம் வகுப்பு

                        இயல்-1

1) தமிழுக்கு அமுதென்று பெயர் எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

பாரதிதாசன்

2) பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

சுப்புரத்தினம்

3) பாரதிதாசன் யாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்?

பாரதியார்

4) பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு ஆகிய புரட்சிகரமான கருத்துக்களை பாடியவர் யார்?

பாரதிதாசன்

5) பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்?

புரட்சிக்கவி

6) பாவேந்தர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?

பாரதிதாசன்

7) தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் என தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

காசி ஆனந்தன்

8) ஏற்றத் தாழ்வற்ற .......... அமைய வேண்டும்.

சமூகம்

9)நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.

அசதி

10)நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

நிலவென்று

11)தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

தமிழெங்கள்

12)‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அமுது + என்ற

13)செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

செம்மை + பயிர்

14)இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக? 

உயிருக்கு- நேர்

விளைவுக்கு - நீர்

வாழ்வுக்கு - ஊர்

இளமைக்கு - பால்

புலவர்க்கு - வேல்

அசதிக்கு - தேன்

உயர்வுக்கு - வான்

அறிவுக்கு - தோள்

கவிதைக்கு - வாள்

15) நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?

உருவாக்கிய

16) விளைவு என்ற சொல்லின் பொருள் என்ன?

வளர்ச்சி

17) சமூகம் என்ற சொல்லின் பொருள் என்ன ?

மக்கள் குழு

18) அசதி என்ற சொல்லின் பொருள் என்ன?

சோர்வு

19)பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

அமுதம், நிலவு, மணம்

20) கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

பெருஞ்சித்திரனார்

21) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

மாணிக்கம்

22) பாவலரேறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

பெருஞ்சித்திரனார்

23) பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள்?

கனிச்சாறு, 

கொய்யாக்கனி, 

பாவியைக்கொத்து, 

நூறாசிரியம்.

24) பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்?

தென்மொழி, 

தமிழ்ச்சிட்டு, 

தமிழ் நிலம்,

25)கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என தொடங்கும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது!

கனிச்சாறு

27) வான் தோன்றி வழி தோன்றி நெருப்புத் தோன்றி எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

வாணிதாசன்

28) ஆடிப்பெருக்கு என்ள சொல்லின் பொருள் என்ன?

கடல் கோள்

29)மேதினி என்னும் சொல்லின் பொருள் என்ன?

உலகம்

30) ஊழி என்னும் சொல்லின் பொருள் என்ன?

நீண்டதொருகாலப்பகுதி

31) உள்ளப்பூட்டு என்னும் சொல்லின் பொருள் என்ன?

 உள்ளத்தின் அறியாமை

32)தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம்.

மேன்மை

33)தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது.

 வானம்

34)‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

செம்மை + தமிழ்

35)பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………..

பொய் + அகற்றும்

36)பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………

பாட்டிருக்கும்

37)எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………

எட்டுத்திசை

38)யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனப் பாடியவர் யார்?

பாரதியார்

39)என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று கூறியவர் யார்?

பாரதியார்

40)உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை?

உயிர் மெய் எழுத்துக்கள்

41)தமிழென் கிளவியும் அதனோ ரற்றே என்று அடி எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்

42)இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் என்று அடி எதில் இடம்பெற்றுள்ளது?

சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்)

43)தமிழன் கண்டாய் என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

அப்பர் தேவாரம்

44) தமிழ் என்ற சொல் முதன் முதலில் எதில் இடம் பெற்றுள்ளது?

தொல்காப்பியம்

45) தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எதில் இடம் பெற்றுள்ளது?

சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்)

46) தமிழன் என்ற சொல் முதன் முதலில் எதில் இடம் பெற்றுள்ளது?

அப்பர் தேவாரம்

47) திணை எத்தனை வகைப்படும்?

இரண்டு (உயர்திணை,அஃறிணை)

48)மா என்னும் சொல்லின் பொருள்?

மரம், 

விலங்கு,

பெரிய, 

திருமகள், 

அழகு, 

அறிவு, 

அளவு, 

அழைத்தல், 

துகள், 

மேன்மை, 

வயல், 

வண்டு.

49) முத்தமிழ் என்பது யாது?

இயல் தமிழ், 

இசைத் தமிழ், 

நாடகத் தமிழ்.

50)...................... எண்ணத்தை வெளிப்படுத்தும்.

இயல் தமிழ்

51)...................... உள்ளத்தை மகிழ்விக்கும்.

இசைத்தமிழ்

52)...................... உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டும் .

நாடகத்தமிழ்

53) பூவின் நிலை எத்தனை?

ஏழு

(1.அரும்பு 

 2.மொட்டு

 3.முகை

 4.மலர்

 5.அலர்

 6.வீ

 7.செம்மல்)

54) தாவர இலை பெயர்கள்

ஆல், அரசு, மா, பலா, வாழை-இலை

அகத்தி, பசலை, முருங்கை-கீரை

அருகு, கோரை-புல்

நெல், வரகு-தாள்

மல்லி-தழை

சப்பாத்திக் கள்ளி, தாழை-மடல்

கரும்பு, நாணல்-தோகை

பனை, தென்னை-ஓலை

கமுகு (பாக்கு)-கூந்தல்

55)வேளாண்மை என்ற சொல் எதில் இடம் பெற்றுள்ளது?

கலித்தொகை, திருக்குறள்

56)உழவர் என்ற சொல் எதில் இடம் பெற்றுள்ளது?

கலித்தொகை

57)பாம்பு என்ற சொல் எதில் இடம் பெற்றுள்ளது?

குறுந்தொகை

58)வெள்ளம் என்ற சொல் எதில் இடம் பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

59)முதலை என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

குறுந்தொகை

60)கோடை என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

அகநானூறு

61)உலகம் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(கிளவியாக்கம்), திருமுருகாற்றுப்படை

62)மருந்து என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

அகநானூறு, திருக்குறள்

63)ஊர் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(அகத்திணையியல்)

64)அன்பு என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(களவியல்), திருக்குறள் 

65)உயிர் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(கிளவியாக்கம்), திருக்குறள் 

66)மகிழ்ச்சி என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(கற்பியல்), திருக்குறள்

67)மீன் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

குறுந்தொகை

68)புகழ் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம் (வேற்றுமையியல்)

69)அரசு என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

திருக்குறள்

70)செய் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

குறுந்தொகை

71)செல் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம் (புறத்திணையியல்)

72)பார் என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

பெரும்பாணாற்றுப்படை

73)ஒழி என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்(கிளவியாக்கம்)

74)முடி என்ற சொல் எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம், வினையியல்

75)நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண் டும்! எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

அறிவுமதி

76)‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்...............

பழமை

77)‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

இடது + புறம்

78)‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......................

சீர்மை + இளமை

79)சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……

சிலப்பதிகாரம்

80)கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….

கணினித்தமிழ்

81)நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ……………

மொழி

82)தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் …………… 

தொல்காப்பியம்

83)மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

எண்களின்

84)நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.

என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்.

85)கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழி 

என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

கார்நாற்பது

86)நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு

என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

87)கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய

நரம்பின் முடிமுதிர் பரதவர்

என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

நற்றிணை

88)தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும்

என்ற அடி எதில் இடம்பெற்றுள்ளது?

திருவள்ளுவமாலை

89)ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி 

என்று பாடியவர் யார்?

ஔவையார்

90)வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எதில் இடம்பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

91)சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை,நரம்பினால் தைத்த செய்தி எதில் இடம்பெற்றுள்ளது?

நற்றிணை

92) தொலைவில் உள்ள பொருட்களின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?

கலீலியோ 

93) தொலைவில் உள்ள பொருட்களின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை திருவள்ளுவமாலையில் எழுதியவர் யார்?

கபிலர்

94) தமிழ் மொழியின் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

 ஐந்து 

(எழுத்து, 

சொல், 

பொருள், 

யாப்பு, 

அணி)

95) ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும்............... எனப்படும்

எழுத்து

96).................வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.

காற்று

97) உயிர் குறில் எழுத்துக்கள் எத்தனை?

5(அ,இ,உ,எ,ஒ)

98) உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

7(ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

99)குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு?

1 மாத்திரை

100) நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு?

2 மாத்திரை

101) மெய் என்பதன் பொருள்?

உடம்பு

102) மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

18(க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்,ற்.)

103)மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு ?

அரை மாத்திரை

104)வல்லினம் எழுத்துக்கள் யாவை?

க், ச், ட், த், ப், ற்

105)மெல்லினம் எழுத்துக்கள் யாவை?

ங், ஞ், ண், ந், ம், ன்

106)இடையினம் எழுத்துக்கள் யாவை?

ய், ர், ல், வ், ழ், ள்

107)மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுவது?

216 உயிர்மெய் எழுத்துகள்

108)ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு?

அரை மாத்திரை

109)Clock wise என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

வலஞ்சுழி

110)Internet என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

இணையம்

111)Search engine என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

தேடுபொறி

112)Facebook என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

முகநூல்

113)Whatsapp என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

புலனம்

114)Anti Clock wise என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

இடஞ்சுழி

115)Voice Search என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

குரல்தேடல்

116)Touch Screen என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

தொடுதிரை

117)App என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

செயலி

118)E-mail என்பதன் தமிழ்ச்சொல் என்ன? 

மின்னஞ்சல்


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌














See Also :