6ஆம் வகுப்பு இயல் -2
ஆறாம் வகுப்பு
இயல்-2
1) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
இளங்கோவடிகள்
2) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் எனத் தொடங்கும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
சிலப்பதிகாரம்
3) திங்கள்,ஞாயிறு,மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல் எது?
சிலப்பதிகாரம்
4) திங்கள் என்னும் சொல்லின் பொருள்?
நிலவு
5) கொங்கு என்னும் சொல்லின் பொருள்?
மகரந்தம்
6) அலர் என்னும் சொல்லின் பொருள்?
மலர்தல்
7) திகிரி என்னும் சொல்லின் பொருள்?
ஆனைச்சக்கரம்
8) பொற்கொட்டு என்னும் சொல்லின் பொருள்?
பொன்மையான சிகரத்தில்
9) மேரு என்னும் சொல்லின் பொருள்?
இமயமலை
10) நாமநீர் என்னும் சொல்லின் பொருள்?
அச்சம் தரும் கடல்
11) அளி என்னும் சொல்லின் பொருள்?
கருணை
12) இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சேர்ந்தவர்?
சேர
13) இளங்கோவடிகள் காலம்?
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
14) சிலப்பதிகாரம் எந்த காப்பியங்களில் ஒன்று?
ஐம்பெருங்காப்பியம்
15) தமிழின் முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
16) சிலப்பதிகாரம் எவ்வாறு போற்றப்படுகிறது?
முதல் காப்பியம்,
முத்தமிழ் காப்பியம்.
17) இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுபவை எது?
சிலப்பதிகாரம்,
மணிமேகலை.
18) தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் யார்?
சோழ மன்னன்
19)கழுத்தில் சூடுவது எது?
தார்
20)கதிரவனின் மற்றொரு பெயர்?
ஞாயிறு
21)‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
வெண்மை + குடை
22)‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
பொன் + கோட்டு
23)கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
கொங்கலர்
24)அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அவனளிபோல்
25) காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
26) பாரதியாரின் இயற்பெயர் என்ன?
சுப்பிரமணியன்
27) பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தவர் யார்?
எட்டயபுரம் மன்னர்
28) பாரதியார் இயற்றிய நூல்கள்?
பாஞ்சாலி சபதம்,
கண்ணன் பாட்டு,
குயில் பாட்டு.
29) காணி என்னும் சொல்லின் பொருள்?
நில அளவை குறிக்கும் சொல்
30) மாடங்கள் என்னும் சொல்லின் பொருள்?
மாளிகையின் அடுக்குகள்
31) சித்தம் என்னும் சொல்லின் பொருள்?
உள்ளம்
32) பாரதியார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
இருப்பதாம் நூற்றாண்டு
33)‘கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் ………..
கேணி
34)நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
நன்மை + மாடங்கள்
35)நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
நிலத்தின் + இடையே
36)முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
முத்துச்சுடர்
37)நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
நிலாவொளி
38) பறவைகள் இடம்பெயர்தலை……….என்பர்
வலசை போதல்
39) சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?
கப்பல் பறவை
40) கப்பல் பறவை தரையிறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
400 கிலோமீட்டர்
41)கப்பல் கூழைக்கடா,
கடற்கொள்ளைப் பறவை என்று அழைக்கப்படும் பறவை எது?
கப்பல் பறவை
42) நாராய் நாராய் செங்கல் நாராய் என்ற பாடலை எழுதியவர்?
சக்திமுத்தப்புலவர்
43) ஆண் சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?
கறுப்பு
44) ஆண் சிட்டுக்குருவியின் உடல் பகுதி எந்த நேரத்தில் இருக்கும்?
அடர்பழுப்பு
45) பெண் சிட்டுக்குருவியின் உடல் பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?
மங்கிய பழுப்பு
46) சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள் இடும்?
மூன்று முதல் ஆறு
47) சிட்டுக்குருவி எத்தனை நாள் அடைகாக்கும்?
14 நாள்
48) சிட்டுக்குருவியின் வாழ்நாள்………
10 முதல் 13 ஆண்டுகள்
49) தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டவர்?
டாக்டர் சலீம் அலி
50) இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படுபவர்?
டாக்டர் சலீம் அலி
51) தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என பெயரிட்டவர் யார்?
டாக்டர் சலீம் அலி
52) காக்கை குருவி எங்கள் சாதி என பாடியவர்?
பாரதியார்
53) சமைப்பதற்கு தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியை சிட்டுக்குருவிகளுக்கு போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர் யார்?
பாரதியார்
54) மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! எனக் கூறியவர் யார்?
டாக்டர் சலீம் அலி
55) உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது?
ஆர்டிக் ஆலா
56) ஆர்டிக் ஆலா எத்தனை கிலோமீட்டர் வரை பயணம் செய்யும்?
22 ஆயிரம் கிலோமீட்டர்
57)‘தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
தட்பம் + வெப்பம்
58)வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
வேதி + உரங்கள்
59)தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
தரையிறங்கும்
60)வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்…………
வழித்தடம்
61)சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ……………….
துருவப்பகுதி
62) கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
எர்னெஸ்ட் ஹெமிங்வே
63) கிழவனும் கடலும் என்னும் நூல் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
1954
64) எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
2
(முதல் எழுத்து,
சார்பெழுத்து)
65) முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
30
(உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18)
66) பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இருப்பது?
முதல் எழுத்துக்கள்
67) முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள்?
சார்பு எழுத்துக்கள்
67) சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்)
10
(1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்)
68) மெய்யெழுத்துகளும் உயிரெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் எந்த எழுத்துக்கள் தோன்றுகிறது?
உயிர்மெய் எழுத்துக்கள்
69) உயிர்மெய் எழுத்தின் வரி வடிவம் எதனை ஒத்திருக்கும்?
மெய்யெழுத்து
70) உயிர் மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு எதனை ஒத்திருக்கும்?
உயிர் எழுத்து
71) மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது?
ஆயுத எழுத்து
72) ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள்?
முப்புள்ளி,
முப்பாற்புள்ளி,
தனிநிலை,
அஃகோனம்,
73) தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வருவது?
ஆயுத எழுத்து
74) முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆயுத எழுத்து……………..ஆகும்
சார்பெழுத்து
75) Continent என்பதன் தமிழ்ச்சொல்?
கண்டம்
76) Migration என்பதன் தமிழ்ச்சொல்?
வலசை
77)Climate என்பதன் தமிழ்ச்சொல்?
தட்பவெப்பநிலை
78)Sanctuary என்பதன் தமிழ்ச்சொல்?
புகலிடம்
79)Weather என்பதன் தமிழ்ச்சொல்?
வானிலை
80)Gravitational Field என்பதன் தமிழ்ச்சொல்?
புவிஈர்ப்புப்புலம்
81) திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகள் முற்பட்டவர்?
2000
82) திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்?
வான்புகழ் வள்ளுவர்,
தெய்வப் புலவர்,
பொய்யில் புலவர்.
83) திருக்குறள் எத்தனை பிரிவுகளை கொண்டது?
மூன்று
(அறத்துப்பால்,
பொருட்பால்,
இன்பத்துப்பால்)
84) திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று?
பதினெண் கீழ்க்கணக்கு
85) திருக்குறள் எத்தனை அதிகாரங்களை கொண்டது?
133
86) திருக்குறள் எத்தனை குறட்பாக்களை கொண்டது?
1330
87) திருக்குறளின் சிறப்பு பெயர்கள்?
உலகப் பொதுமறை,
வாயுறை வாழ்த்து
88)மக்களுக்கு மகிழ்ச்சி தருவது?
அறிவுடைய மக்கள்
89)ஒருவர்க்குச் சிறந்த அணி?
இன்சொல்
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
Post a Comment
image quote pre code